S10
என் பெயர் சங்கரசுப்பிரமணியன். நான் சிங்கப்பூரில், ஒரு தனியார் கப்பல் நிருவனத்தில், தீர்வுக்கட்டமைப்பு (Solution Architecture), தகவல் கட்டமைப்பு (Data Architecture) மற்றும் மென்பொருள் ஒருங்கணைப்பின் (Software Integration) தலமை பொருப்பு வகித்து வருகிறேன்.
தமிழ் பேச்சில், இங்கே உள்ள கற்றரிந்த சான்றோர் போல் அல்லன். கத்துக்குட்டி. சிங்கை நற்பணி சொல்வேந்தர் மன்ற உறுப்பினன். திருக்குறள், திருவாசகம் மற்றும் சைவ சித்தாந்த நூல்களில் ஆழக்கல்வி கற்க மிகுந்த ஆர்வம் கொண்டவன்.
திருக்குறளில், ஊழியல் ஒரு தனித்த சிறப்புக்கொண்ட இயல். அதன் வைப்பு முறையையும், அதை திருவளுவர் மனோதத்துவ ரீதியாகக் கையாண்டுள்ளதாகக் கருதும் என்னுடை ஒரு சில சிந்தனைகளையும் உங்கள் முன் பேச இருக்கின்றேன்.
Comments
Post a Comment